தற்போதைய செய்திகள்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமித் ஷா

ANI

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை மாலை வீடு திரும்பினார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்க இருந்த நிலையில், அண்மையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை முடிந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.

அவ்வாறு அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது அளிக்கப்பட்ட மருத்துவ ஆலோசனையின்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு நாள்கள் தங்கியிருந்து முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்காக மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தற்போது முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்ட அமித் ஷா 6 நாள்களுக்கு பின் இன்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT