முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி அருகே ஆடு திருடிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம் விபத்து: ஒருவர் பலி; 2 பேர் காயம்

சீர்காழி அருகே ஆடு திருடிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.
பகிர்:



சீர்காழி: சீர்காழி அருகே ஆடு திருடிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரில் வசித்து வருபவர் சுரேஷ் (30) கொத்தனார் வேலை பார்த்து வந்தார், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் நண்பர்களான பாண்டித்துரை, அரவிந்த் உள்ளிட்ட 3 பேரும் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று பக்கத்து கிராமமான பழையார் கிராமத்தில் ஆடு திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், கூழையார் பிரதான சாலை ஒரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆடு திருடிய சம்பவத்தை மறைப்பதற்காக சுரேஷின் உடலை  காயமடைந்த நண்பர்களான இருவரும் இரவோடு இரவாக சுரேஷின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகன விபத்து என கூறி சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். 

இதுகுறித்து சீர்காழி  காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆடு திருடியதை மறைக்கவே கொலை என நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →