பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி கைது
பெங்களூரில் 2008 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் 2008 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,
பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு வகித்த ஷோயப் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவியுடன் பெங்களூரு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஷோயபை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தனர் என கூறினர்.
பெங்களூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில், ஒருவர் பலியானார், 8 பேர் காயமடைந்தனர்.