கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டம் துபையில் நடைபெறுகிறது. இதில், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் அணியில் வெளிநாட்டு வீரர்களாக கிளென் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரன், ஜேம்ஸ் நீஷம், ஷெல்டன் கோட்ரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கெயிலுக்கு இடமில்லை.
பெங்களூரு அணியில் ஆரோன் பின்ச், ஏபி டி வில்லியர்ஸ், ஜோஷ் பிலிப், டேல் ஸ்டெயின் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர்.