பி.எஃப். திட்டத்தில் புதிதாக 3.5 கோடி பேர் : மத்திய அரசு
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 3.5 கோடி பேர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 3.5 கோடி பேர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளிட்ட அறிக்கையில்,
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2017 முதல் ஜூலை 2020 வரை வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிதாக 3,50,84,656 பேர் சேர்ந்துள்ளனர்.
மேலும், ஊழியர்கள் மாநில காப்பீடு (இ.எஸ்.ஐ) திட்டத்தில் 4,07,44,094 பேரும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 21,33,555 பேரும் புதிதாக பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது