பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் மேற்குவங்கத்தில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் கடைசி நாள் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் கூச்பெஹாரில் உள்ள மெகாலிகஞ்ச் பகுதியில் தேர்தல் பேரணி நடைபெற்றது.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 பேரணியில் கலந்து கொண்டார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.