ஏப்.14-ல் சென்னை புறநகர் ரயில் சேவையின் அட்டவணை மாற்றம்
சென்னை புறநகர் ரயில் சேவையின் ஏப்ரல் 14ஆம் தேதி அட்டவணையை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவையின் ஏப்ரல் 14ஆம் தேதி அட்டவணையை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி சென்னை புறநகர் ரயில் சேவையானது வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
அரசு விடுமுறை நாளான ஏப்ரல் 14ஆம் தேதி பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை குறைத்து வார இறுதி நாள் அட்டவணையை மாற்றி அமைத்துள்ளனர்.