பஞ்சாப் கிங்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் 8-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் எந்த மாற்றமுமின்றி கடைசி ஆட்டத்தில் விளையாடிய அணியுடன் களமிறங்குகின்றன.