தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் ஆக்ஸிஜன் லாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு

ANI

ஆக்ஸிஜன் ஏற்றிவரும் லாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஆக்ஸிஜனுக்கு தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹரியாணாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை தில்லிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், தங்கள் மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னரே மற்றவர்களுக்கு கொடுப்போம் என  ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹரியாணாவின் ஃபரிதாபாத் நகரில் உள்ள மருத்துவமனைக்கு ஆக்ஸிஜனை லாரியில் கொண்டு செல்லும் வழியில் தில்லி அரசு கொள்ளையடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அனைத்து ஆக்ஸிஜன் ஏற்றிவரும் லாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT