நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கம்: ரயில்வே வாரியம்
நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே வாரியம் தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே வாரியம் தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ரயில்வே வாரியம் தலைவர் சுனீத் சர்மா கூறியது,
தற்போது 1,514 விரைவு ரயில்களும், 5,387 புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 947 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்த சேவையில் 70 சதவீதம் தற்போது இயக்கப்படுகிறது.