முகப்பு
தற்போதைய செய்திகள்

’தமிழக ஆக்ஸிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது’: முதல்வர் கடிதம்

தமிழக ஆலைகளிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

தமிழக ஆலைகளிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்ஸிஜன் உற்பாத்தி ஆலையிலிருந்து ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து பிரமருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில்,

தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு சென்றால், கடும் பற்றாக்குறை ஏற்படும்.

தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைவிட குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இங்கிருந்து ஆக்ஸிஜனை திருப்பிவிட்டால், சென்னை போன்ற நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

நாள்தோறும் தமிழகத்திற்கு 310 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில், விரைவில் 450 மெட்ரிக் டன் தேவைப்படும் நிலையில் உள்ளது.

ஆகையால் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ள ஆக்ஸிஜனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →