பஞ்சாப்: ஒரே பள்ளியில் 42 மாணவர்களுக்கு கரோனா
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 42 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 42 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொஹாலி மாவட்டத்தின் டாங்கோரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 42 மாணவர்கள் உள்பட 45 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மொஹாலி மாவட்ட ஆட்சியர் கூறியது,
கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கும் பிற மாணவர்கள் வீடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாக இயக்குநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.