தற்போதைய செய்திகள்

உ.பி.யில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் 5 பேர் பலி

ANI

உத்தரப் பிரதேசம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் அருகே இன்று அதிகாலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தின் போது, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் பலியாகினர்.

மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது தாயின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் தந்தையின் உடலை தேடி வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் உ.பி. முதல்வர் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT