உத்தரப் பிரதேசம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் அருகே இன்று அதிகாலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தின் போது, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் பலியாகினர்.
மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது தாயின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் தந்தையின் உடலை தேடி வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் உ.பி. முதல்வர் அறிவித்துள்ளார்.