நாடு முழுவதும் கரோனாவால் 162 மருத்துவர்கள் பலி
நாடு முழுவதும் 162 மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 162 மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் தகவல்கள் குறித்த கேள்விக்கு மத்திய சுகாதாத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.
அவர் நாடாளுமன்றத்திற்கு அளித்த பதிலில்,
கரோனாவால் இதுவரை நாடு முழுவதும் 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் மற்றும் 44 சுகாதாரத்துறை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் ஜனவரி 22ஆம் தேதி வரை மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.