முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி முதல்வர் மகளிடம் பணமோசடி: 3 பேர் கைது

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
தில்லி முதல்வர் மகளிடம் பணமோசடி செய்த 3 பேர் கைது
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகள் ஹர்ஷிதா, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி பழைய சோபா ஒன்றை ஆன்லைன் மூலமாக விற்பதற்கு பதிவிட்டுள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து தொடர்பு கொண்ட ஒருவர் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அனுப்பிய க்யூ. ஆர். கோடை ஸ்கேன் செய்த ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20,000 மற்றும் ரூ. 14,000 என மொத்தம் ரூ. 34,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதையறிந்த ஹர்ஷிதா தில்லி சிவில் லைன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மதுரா எல்லையில் சஜித்(26), கபில்(18) மற்றும் மன்வீந்திர் சிங்(25) ஆகியோரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், முக்கியக் குற்றவாளியான வாரிஸ்(25) என்பவரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →