முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் சாலை விபத்து: குழந்தை உள்பட மூவர் பலி

ராஜஸ்தானில் இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 17 பிப்ரவரி, 2021 at 4:22 PM
ராஜஸ்தானில் கார் விபத்து: குழந்தை உள்பட மூவர் பலி
பகிர்:

ராஜஸ்தானில் இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் புதன்கிழமை அனுப்கர்-சூரத்கர் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கோமல்பிரீத் ( வயது 24), அவரது மகள் ஹார்லீன் கவுர் (3) மற்றும் மற்றொரு காரில் இருந்த ராஜ்ஜோ பாய் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Advertisement

மேலும், காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.