ராஜஸ்தானில் சாலை விபத்து: குழந்தை உள்பட மூவர் பலி
ராஜஸ்தானில் இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் புதன்கிழமை அனுப்கர்-சூரத்கர் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கோமல்பிரீத் ( வயது 24), அவரது மகள் ஹார்லீன் கவுர் (3) மற்றும் மற்றொரு காரில் இருந்த ராஜ்ஜோ பாய் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.