ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக நாளை(சனிக்கிழமை) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவகம் வெளியிட்ட செய்தியில்,
சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டுகிறார் என தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் கணேஷி லால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்பட பலர் காணொளி மூலம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.