பிகாரில் 22 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா
பிகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
பிகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கள்கிழமை(ஜன.4) பிகாரில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், முங்கர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட சோதனையில் உறுதியாகியுள்ளது.
இரண்டாவது கட்ட ஆன்டிஜென் சோதனையில் தொற்று இல்லை என வந்ததையடுத்து, மாணவர்களின் மாதிரிகளை ஆர்டி-பிசிஆர் சோதனைக்காக பாட்னாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட திட்ட மேலாளர் நசீம் கான் தெரிவித்துள்ளார்.