வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் கொண்டாட்டம் 
தற்போதைய செய்திகள்

போகி: வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் கொண்டாட்டம்

போகிப் பண்டிகையை முன்னிட்டு தில்லியில் போராடும் விவசாயிகள் மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடினார்கள்.

ANI

போகிப் பண்டிகையை முன்னிட்டு தில்லியில் போராடும் விவசாயிகள் மத்திய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாடினார்கள்.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்பாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 50 நாள்களாக தொடர்ந்து தில்லியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், போகிப் பண்டிகையை முன்னிட்டு வேளாண் சட்ட நகல்களை தில்லி, ஹரியாணா எல்லைகளில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் எரித்துக் கொண்டாடினார்கள்.

ஜந்தர் - மந்தரில் போராடி வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேளாண் சட்ட நகல்களை எரித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு, விவசாயிகளுடன் பேச குழு அமைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT