தடுப்பூசியை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குக: மம்தா
கரோனா தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் பேசியது,
இந்தாண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது அடிப்படை தன்மை இல்லாத ஒன்று. மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்புவதில்லை. தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசுகளுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.