முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பையில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்

மகாராஷ்டிரத்தின் மும்பை மற்றும் கடலோரப் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜூன், 2021 at 3:47 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தின் மும்பை மற்றும் கடலோரப் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மும்பை உள்பட கடலோரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

Advertisement

கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு இன்று சிவப்பு, அடுத்த 4 நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் கடலோரப் பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் பல்கார் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

முக்கிய சாலைகளிலும், தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்குவதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.