முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராகேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடனும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மாநிலங்களில் தேசிய தடுப்பூசி கொள்கையை முறையாக பின்பற்றி தடுப்பூசி போடப்படுகிறதா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ஆலோனைக் கூட்டத்தில் பேசிய ராஜேஷ் பூஷண், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.