ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்(படம்: டிவிட்டர்) 
தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் திடீர் வெள்ளம்: 7 பேர் பலி, பலர் மாயம்

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இதுவரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ANI

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இதுவரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பருவமழைக் காரணமாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஊருக்குள் புகுந்த ஆற்றுநீர் பலரை அடித்துச் சென்றது.

அடித்துச் சென்றவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த வெள்ளத்தால் மின் கம்பங்கள், பாலங்கள், சாலைகள் என அனைத்து விதமான தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT