ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய அரசு
நாடு முழுவதும் ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்கப்பட்டது. முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், 18 வயதுடையோர் என பல கட்டங்களை கடந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்துள்ளது.
புதிய கொள்கை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.