தற்போதைய செய்திகள்

பஞ்சாப்: ஆம் ஆத்மியில் இணைந்தார் முன்னாள் காவல் அதிகாரி

பஞ்சாபின் முன்னாள் காவல் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.

ANI

பஞ்சாபின் முன்னாள் காவல் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் சிங் ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி உள்ளிட்ட வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது, கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காவல் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் ஆம் ஆத்மி கட்யியில் இணைந்தார்.

இந்த நிகழ்வில் பேசிய கேஜரிவால் கூறியதாவது,

குன்வர் விஜய் பிரதாப் அரசியல்வாதி அல்ல. ஆனால், தேசத்திற்காக சேவை செய்ய இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்துவோம். பஞ்சாப் முழுவதும் பெருமிதம் கொள்ளும் ஒருவராக அவர் இருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT