சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு 
தற்போதைய செய்திகள்

சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு

சாம்சங்கின் புதிய கேலக்சி ஏ42 5ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போனை, தென் கொரியாவில் இந்த வாரம் வெளியீடப் போவதாக அறிவித்துள்ளது.

DIN

சாம்சங்கின் புதிய கேலக்சி ஏ42 5ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போனை, தென் கொரியாவில் இந்த வாரம் வெளியீடப் போவதாக அறிவித்துள்ளது.

கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், கேலக்சி ஏ42 ஸ்மார்ட்போனை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளது. அந்த போனின் விலையை 400 அமெரிக்க டாலராக(இந்திய மதிப்பின்படி ரூ. 29,300) நிர்ணயம் செய்துள்ளது.

ஏ42 5ஜி ஸ்மார்ட்போனை கடந்தாண்டு இறுதியில், ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வெளியிட்டது.

புதிதாக வெளியிடப்போகும் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்பு:

டிஸ்பிளே: 6.6 அங்குலம் 
பிரதான கேமிரா: 48 எம்பி
முன் கேமிரா: 20 எம்பி
பேட்டரி: 5,000 எம்ஏஎச்
ரேம்: 4 ஜிபி
சேமிப்பு: 128 ஜிபி (1 டிபி வரை நீடித்துக் கொள்ளலாம்)

மேலும், சாம்சங் நிறுவனம் இந்தாண்டு 5ஜி ஸ்மார்ட்போன் ஏ32, ஏ52 மற்றும் ஏ72 ஆகிய மாதிரிகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஒரு ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT