கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜெ.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.