முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் அதிகரிக்கும் கரோனா: மேலும் 370 பேர் பாதிப்பு

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 370 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
தில்லியில் அதிகரிக்கும் கரோனா: மேலும் 370 பேர் பாதிப்பு
பகிர்:

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 370 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,42,030 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 279 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,28,686 பேர் குணமடைந்துள்ளனர், 10,931 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் 1,900 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →