அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவு: ஆளுநர் இரங்கல்
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான முகமது ஜான் மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான முகமது ஜான் மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
தமிழக நலனுக்காக தனது வாழ்நாளை அர்பணித்தவர் முகமது ஜான் எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அ. முகமது ஜான் கடந்த ஒரு வார காலமாக, ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம். குமாரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மதிய உணவுக்காக இன்று வீட்டிற்கு சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.