சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாடி சுந்தர்ராஜ் கூறியதாவது,
நாராயன்பூரில் இன்று மாலை பாதுகாப்புப் படை வாகனம் மீது நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. வெடிகுண்டு தாக்குதலில் 3 மாவட்ட ரிசர்வ் காவல்படை வீரர்கள் மற்றும் ஒரு காவலர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.