மும்பையில் மட்டும் 5,504 பேருக்கு கரோனா
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 5,504 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 5,504 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2,281 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 14 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,80,115 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,33,603 பேர் குணமடைந்துள்ளனர். 11,620 பேர் பலியாகியுள்ளனர்.
இன்னும் 33,961 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.