குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,847 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,
குஜராத் மாநிலத்தில் சமீப காலமாகத் தொற்று அதிகளவில் பரவி வருகின்றது. அதன்படி, ஒரேநாளில் 13,847 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,81,624 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று காரணமாக 172 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்தம் 7,355ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்த 10,582 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து 4,29,130 பேர் குணமடைந்தனர். தற்போது மருத்துவமனை சிகிச்சையில் 1,42,139 பேர் உள்ளனர்.