முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பிய பிரிட்டன், குவைத்

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரிட்டன், குவைத் நாடுகளிலுருந்து மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள்
பகிர்:

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரிட்டன், குவைத் நாடுகளிலுருந்து மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

இதனால் நாட்டில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் பிரிட்டனிலிருந்து 450 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், குவைத் நாட்டிலிருந்து 282 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 60 ஆக்ஸிஜன் வெண்டிலேட்டர்கள் மற்றும் சில மருத்துவ உபகரணங்களை இன்று அனுப்பியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →