முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும்

சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும்
பகிர்:

சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை தமிழகத்தில் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு வசதியாக நாளை வார இறுதி நாள் பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு 10 மணி முதல் அனைத்து கடைகளும் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாளை(மே 9) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும், காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →