சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையால் பலர் பாதிக்கப்படுவதை அடுத்து, மாநிலம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பரவல் குறித்து ஆளுநரை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பில், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.