தற்போதைய செய்திகள்

ஊரடங்கு மீறல்: சென்னையில் ஒரே நாளில் 5,428 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

சென்னையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மே 24ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி சென்னையில் பலர் வெளியே சுற்றி வருவதாக தொடர்ந்து புகார் எழுந்ததையடுத்து திங்கள்கிழமை முதல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

சென்னையில் நேற்று ஒரே நாளில் கரோனா விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 3,422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 9.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

 கரோனா விதிமுறைகள் மீறி செயல்பட்ட 75 கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT