தில்லியின் காவல்துறை ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா மத்திய ரிசர்வ் காவல் படையில் இருந்தார்.
கடந்த பிப்ரவரி 2020ஆம் ஆண்டு முதல் தில்லி காவல் ஆணையராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது தில்லி காவல் ஆணையராக நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.