கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

மணிப்பூர்: தேசிய மக்கள் கட்சி வேட்பாளரின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு

தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மணிப்பூர் வேட்பாளர்  சஞ்சோயின் தந்தை சம்ஜய் சிங், வெள்ளிக்கிழமை இரவு ஆந்த்ரோ தொகுதியில் போட்டியிடும் தனது மகனுக்காக சிங் பிரசாரம் செய்தார்.

PTI

கவுகாத்தி: தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மணிப்பூர் வேட்பாளர்  சஞ்சோயிக்காக வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் செய்து கொண்டிருந்த அவரது தந்தை சம்ஜய் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுடப்பட்டதில் சம்ஜய் சிங் காயமடைந்தார். அவருக்கு வலது தோளில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது. சஞ்சோய் பாஜகவில் இருந்து கடந்த மாதம் தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் கே சங்மா, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சஞ்சோயை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.  குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் சுட்டுரைப் பக்கத்தில், "எங்கள் வேட்பாளர்  சஞ்சோய் சிங்கின் தந்தை சம்ஜய் சிங் பிரசார நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுடப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவங்கள் நமது புனித சாரத்தை கெடுக்கின்றன" என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

வேன் பதிப்புக்கு... ராகுல் பேச்சால் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

SCROLL FOR NEXT