முக்கியச் செய்திகள்

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்!

கார்த்திகா வாசுதேவன்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் காலமானார். இவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். 1998 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் போது ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராகக் திகழ்ந்தார். இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது தான் கார்கில் போர் நடந்தது. அதுமட்டுமல்ல, இவர் மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராக பதவி வகித்த போதும் அவரது அமைச்சரவையில் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. வட இந்தியத் தலைவர்களோடு மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர். 88 வயதான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று காலை டெல்லியில் உடல்நலக் குறைபாட்டால் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT