நேற்றைய அதி தீவிர வர்தா புயலின் பாதிப்பால் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மின்விநியோகம், முதற்கட்டமாக கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சீரானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை முழுதும் சுமார் 4000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ள நிலையில் முதற்கட்டமாக சென்னையின் உட்பகுதியான இந்த மூன்று இடங்களிலும் மின் சேவை சீரமைக்கப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிற புறநகர்ப் பகுதிகளிலும் மின் சேவைகள் குறுகிய காலத்தில் சரி செய்யப் படும் எனத் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.