முகப்பு
தற்போதைய செய்திகள்

மர்ம நபர்கள் பின்தொடர்வதாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் போலிஸில் புகார்

பல்வேறு இடங்களுக்கு பணி சம்பந்தமாக செல்லும் தன்னை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கண்காணிப்பதாக மெஞ்ஞானபுரம்

Updated On : 30 செப்டம்பர், 2016 at 3:08 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:53 PM

பல்வேறு இடங்களுக்கு பணி சம்பந்தமாக செல்லும் தன்னை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கண்காணிப்பதாக மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி(அனுமன் சேனா)அமைப்பின் உடன்குடி ஒன்றியத் தலைவர் எ.ரவிச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில்,கடந்த செப்.26 ஆம் தேதி செட்டியாபத்து அருகே இரு
சக்கர வாகனத்தில் வந்த தன்னை மர்ம நபர்கள் வழிமறித்து மிரட்டும் தொனியில் விசாரித்தனர். மேலும் பேரூராட்சிகளில் ஒப்பந்த பணிகள் செய்யும் நான் பணி சம்பந்தமாக ஆத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தன்னை இடிப்பது போல சென்றனர்.

பணி சம்பந்தமாக பல்வேறு இடங்களுக்கு செல்லும் என்னை கொல்ல முயற்சிகள் நடப்பதாக அறிகிறேன்.எனவே எனக்கு உரிய பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.