தற்போதைய செய்திகள்

கேரளத்தின் தளர்வு அறிவிப்புக்கு மத்திய உள்துறை எதிர்ப்பு

DIN

கேரளத்தில் ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மேலும், இது விதிமீறல் என்று குறிப்பிட்டுள்ள உள்துறை, இதைப் பின்பற்றித் தளர்வுகளை அறிவிக்க வேண்டாம் என்று பிற மாநிலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

முடி திருத்தகங்கள், உள்ளூர்ப் பணிமனைகள், உணவகங்கள் போன்றவற்றைத் திறக்க அனுமதித்துள்ள கேரள அரசின் முடிவுக்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், மாற்றியமைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கை மீறுவதால் மோசமான விளைவுகள் நேரிடலாம் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

இதுதொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதமொன்றையும் ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு கேரளத் தலைமைச் செயலருக்குத் தனியே ஒரு கடிதத்தையும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா எழுதியுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT