தற்போதைய செய்திகள்

உடும்பைப் பிடித்து டிக்டாக் வெளியிட்டு, சமைத்துத் தின்ற 6 பேர் கைது

மணப்பாறை அருகே உடும்பைத் பிடித்துத் துன்புறுத்தி டிக்டாக் செயலியில் விடியோ எடுத்து வெளியிட்டதுடன், சமைத்தும் தின்றதாக 6 இளைஞர்களை  வனத் துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

மணப்பாறை அருகே உடும்பைத் பிடித்துத் துன்புறுத்தி டிக்டாக் செயலியில் விடியோ எடுத்து வெளியிட்டதுடன், சமைத்தும் தின்றதாக 6 இளைஞர்களை  வனத் துறையினர் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை வனச் சரகப் பகுதியில் இளைஞர்கள் சிலர் உடும்பைப் பிடித்து துன்புறுத்தி டிக்டாக் செயலியில் விடியோ வெளியிட்டுள்ளனர்.

இதுபற்றி மணப்பாறை வனச் சரகர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சோலையம்மப்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் சரவணன், செல்வக்குமார், பொன்னர், ரஞ்சித்குமார், லோகநாதன், சூர்யா ஆகியோர் உடும்பை வேட்டையாடியதும் துன்புறுத்தி டிக்டாக் செயலியில் வெளியிட்டதும், பின்னர் சமைத்துத் தின்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த வனத்துறையினர், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக செயல் தலைவராக நிதின் நவீன் நியமனம்: தில்லி முதல்வா் வாழ்த்து

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: 4 சிறுவா்களிடம் விசாரணை

விக்கிரவாண்டி பெருமாள் கோயிலில் ஆண்டாள் உற்சவா் சிலை பிரதிஷ்டை

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங். ஆர்ப்பாட்டம்: சசி தரூர் பங்கேற்காததற்கு இதுதான் காரணமாம்..!

SCROLL FOR NEXT