பிரதமர் மோடியை விமர்சித்த ராகுலுக்கு பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் பதிலடி
லடாக் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்திக்கு பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போதைய செய்திகள்பிரதமர் மோடியை விமர்சித்த ராகுலுக்கு பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் பதிலடி
லடாக் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்திக்கு பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
லடாக் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்திக்கு பாஜக தேசியச்செயலர் ராம் மாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.
கரோனா பரவல், இந்திய பொருளாதாரம், லடாக் விவகாரம் போன்ற பல பிரச்சனைகள் குறித்து ராகுல்காந்தி தொடர்ந்து பாஜகவை கேள்வி எழுப்பி வருகிறார்.
அந்தவகையில், இந்திய ராணுவத்தின் திறமையையும், வீரத்தையும் பிரதமரைத் தவிர அனைவரும் நம்புகின்றனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். கோழைத்தனத்தால் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த அதிகாரத்தை யார் அளித்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே பாட்னாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2-ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசியச்செயலர் ராம் மாதவ், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, நம் நாட்டு ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பற்றி சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். இதனைக் கேட்டபிறகும் ஒருவர் இவ்வாறு பேசுகிறார் என்றால் அதன் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
லடாக் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும், கரோனாவுக்கு எதிரான போரில் இறந்தவர்களுக்கும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இந்திய இறையாண்மைக்கு சவால் விடுபவர்களுக்கு ராணுவ வீரர்கள் எவ்வாறு பதிலளிக்காமல் இருக்க முடியும் என்று கூறினார்.