சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நான்கு நாள்களுக்கு (ஜன.24, 27, 30, பிப்ரவரி 2) இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞா்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து தமிழ் கலாசாரத்தின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக, மெட்ரோ ரயில்நிலையங்கள், ரயில்களில் ஜனவரி 24, 27, 30, பிப்ரவரி 2) ஆகிய தேதிகளில் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விமான நிலையம், வண்ணாரப்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒயிலாட்டம், தேவராட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் ஜன.24 நடைபெறவுள்ளது. விமானநிலையம் மெட்ரோ ரயில்நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கோயம்பேடு, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜனவரி 27-ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்ட்ரல் ஆகிய மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜனவரி 30ஆம் தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.