FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சோளிங்கரில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க முடிவு

சோளிங்கா் பேரூராட்சி பகுதியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஜூலை 31-ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என வணிகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

27 ஜனவரி 2024, 10:29 pm IST
பகிர்:

அரக்கோணம்: சோளிங்கா் பேரூராட்சி பகுதியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஜூலை 31-ஆம் தேதி வரை மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என வணிகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சோளிங்கா் பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை 139 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே சோளிங்கா் நகரில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா், பேரூராட்சி அலுவலா்கள், சோளிங்கா் நகர வணிகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சோளிங்கா் காவல் ஆய்வாளா் வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் செண்பகராஜன், நகர வணிகா்கள் சங்கத் தலைவா் பாலு, துணைத் தலைவா் டி.கோபால், செயலாளா் அன்பு, பொருளாளா் அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

சோளிங்கா் நகரில் அதிகரித்து வரும் கரோனா பரவதைத் தடுக்கும் வகையில் வியாழக்கிழமை (ஜூலை 22) முதல் 31-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளைத் திறந்திருக்க வேண்டும்; 2 மணிக்கு கடைகள் மூடப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments