முகப்பு
வணிகம்

வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

Updated On : 16 மார்ச், 2026 at 2:13 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 1 முதல் அதன் வர்த்தக வாகனத்தின் விலையை 1.5% வரை உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து பிற செலவுகளின் தாக்கத்தையும் ஓரளவு ஈடுசெய்ய, வர்த்தக வாகனத்தின் விலையை உயர்த்த நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தது.

வணிக வாகன விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ், வர்த்தக வாகனத்தின் மாடலை பொறுத்து இந்த அதிகரிப்பு மாறுபடும் என்றது.

180 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய பயன்பாட்டு வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2.82 சதவீதம் உயர்ந்து ரூ.437.75 ஆக முடிவடைந்தன.

summary

Tata Motors said it will increase the prices of its commercial vehicle from April 1.

முழு கட்டுரையைப் படிக்க →