மேற்காசிய பதற்றம்: வளைகுடாவிலிருந்து இரு வாரங்களில் 2 லட்சம் பயணிகள் தாயகம் திரும்பினர்!
வளைகுடாவிலிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு
வளைகுடாவிலிருந்து கடந்த பிப். 28 முதல் இன்று (மார்ச் 16) வரையிலான காலகட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய அரசு திங்கள்கிழமை(மார்ச் 16) தெரிவித்தது.
மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் விமான சேவை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாத சூழலில், கடந்த பிப். 28-இல் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளிலிருந்து ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர்.
விமான சேவை சற்று சீராகியுள்ள நிலையில், கடந்த பிப். 28 முதல் இன்று(மார்ச் 16) வரை 2.20 லட்சம் இந்தியப் பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
summary
Over 2 lakh Gulf passengers returned to India: MEA official says Indians in Iran crossed into Armenia, Azerbaijan