மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு
மார்ச் 1 - 7 வளைகுடா பிராந்தியத்திலிருந்து 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்
மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா பிராந்தியத்திலிருந்து 52,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், மார்ச் 1 - 7 வரையிலான காலகட்டத்தில், வளைகுடா மற்றும் மேற்காசிய பிராந்தியங்களிலிருந்து 52,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.