தற்போதைய செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் ரூ. 25 லட்சம்

DIN

முதல்வர் பொது நிவாரண நிதிக்குத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பரவும் கரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்கப் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்காக ரூ. 25,73,790 வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் திருச்சி கிளையின் பங்களிப்பாக ரூ. 2 லட்சத்து நூறு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகைக்கான காசோலையைத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் மகேசுவரனிடம் சங்கத்தின் பொதுச்செயலர் ந. இராசகுமார், சங்கப் பொருளாளர் எஸ். ஜோதிவீரபாண்டியன், சென்னை கிளைச் செயலர் சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

இந்த சந்திப்பின்போது, ஓய்வூதியர்களுக்குக் கிடைக்க வேண்டிய, நிலுவையிலுள்ள சுமார் ரூ. 250 கோடி ஓய்வூதியப் பணப் பயன்களை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக ஆவன செய்வதாக வாரிய மேலாண் இயக்குநர் மகேசுவரனும் நிதி இயக்குநர் நிதி இயக்குநர் சீனிவாசராகவனும் தெரிவித்தனர் எனச் செய்திக்குறிப்பொன்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத் திருச்சி கிளை இணைச் செயலர் அ. நடராசன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவதூறு கருத்து: புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி கைது

சிஏஏ: குடியுரிமை வழங்க திரிபுராவில் மாநில அளவிலான குழு அமைப்பு

அரசியல் சாசன அமா்வின் தீா்ப்பு: குறைவான நீதிபதிகள் கொண்ட அமா்வைக் கட்டுப்படுத்தும் -உச்சநீதிமன்றம்

சொகுசுப் பேருந்தில் பயணித்த முதியவா் உயிரிழப்பு

வயிற்று வலியால் விஷம் குடித்தவா் மரணம்

SCROLL FOR NEXT